×

சப்பாத்திக்காக மாணவி தற்கொலை

நாகர்கோவில்: நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலபெருவிளையை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 5 குழந்தைகள். இதில் 5வது மகள் சிவசாந்தினி (15), 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம்தேதி மாலை பள்ளியில் இருந்து வந்த சிவசாந்தினி, தனக்கு வைத்திருந்த சப்பாத்தியில் பாதியை அக்காள் ஒருவர் சாப்பிட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துக் கொண்ட சிவசாந்தினி அறைக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து பார்த்த போது அறைக்குள் சிவசாந்தினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

The post சப்பாத்திக்காக மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sabbath ,Nagercoil ,Asaripallam Melaperuvilai ,Shivasandini ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...