×

பெரம்பலூர் அருகே அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு

பெரம்பலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் செல்லும் சாலையில் செந்தில்குமார் என்பவரது விவசாய நிலம் உள்ளது. 5.11.23 காலை செந்தில்குமார் தங்களது வயலில் பயிரிட்டுள்ள சின்ன வெங்காயம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது.

இதனை கண்ட அந்த விவசாயி அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் மணிகண்டன் அந்த நட்சத்திர ஆமையை மீட்டு சிறுவாச்சூர் காப்பு காட்டில் விட்டனர்.

The post பெரம்பலூர் அருகே அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Natarmangalam ,Aladhur taluk ,Dinakaran ,
× RELATED பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி