சிவகாசி, நவ. 5: அடுத்த சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் கலைமகள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நேற்று முன் தினம் காலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் நடந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை சிவகாசி ஆர்டிஓ விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தாசில்தார் வடிவேல், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தனித்துணை தாசில்தார் (தேர்தல்) அருளானந்தம், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பாண்டியராஜன், செல்வம், ஆசிர்வாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வழியாக சென்று பின்னர் மீண்டும் பள்ளியை அடைந்தது.
The post சிவகாசியில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.
