×

காங்கயத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு

 

காங்கயம், நவ.5: காங்கயத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் திருடு போனது. தொடர்ச்சியாக 2வது நாளாக நடக்கும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.காங்கயம் சென்னிமலை பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இதன் மேல் மாடியில் தனியார் நிதி நிறுவன கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம் போல் நிறுவனத்தை கிளை மேலாளர் பிரபு பூட்டி சென்றுள்ளார்.

நேற்று காலை கிளையை திறக்க வந்த போது வங்கியின் பாதுகாப்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.5 லட்சம் திருடப்பட்டதும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்றதும் தெரியவந்தது. கிளை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காங்கயத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Gangayil ,Dinakaran ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்