×

புகையிலை விற்றவர் கைது

 

கோபி,நவ.5: கோபி அருகே உள்ள காமராஜ் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதைத்தொடர்ந்து சிறுவலூர் எஸ்.ஐ. ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் காமராஜ் நகரில் உள்ள கணேசன்(61) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கடையில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட 5 கிலோ 155 கிராம் எடையுள்ள 1605 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்ததுஅதைத்தொடர்ந்து பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த கணேசனை(61) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kobe ,Kamaraj ,Sriwalur ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை