×

அமர் பிரசாத்ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: கடந்த மாதம் 21ம் தேதியன்று, செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வீட்டில் இருந்த கொடிக்கம்பத்தை கானத்தூர் போலீசார் அகற்றினர். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக, அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்பிரசாத் ரெட்டி தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post அமர் பிரசாத்ரெட்டி ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Amar Prasadreddy ,Chennai ,BJP ,president ,Annamalai ,Panayur, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...