×

அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது..!!

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது. செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் ஆணைப்படி 700 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை வட்டாட்சியர் தொடங்கினார். காவல் இணை ஆணையர் மூர்த்தி, துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

The post அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Adyar river ,CHENNAI ,Anagaputhur ,Pallavaram ,Chengalpattu ,Rahul Nath ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...