×

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, மதுரை,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, சிவகங்கை, கன்னியாகுமரி பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chengalpattu ,Kanchi ,Kanji ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...