×

கோட்டூரில் 44 பள்ளிகளில் மாநில கல்வி அடைவுத்தேர்வு

 

மன்னார்குடி, நவ. 4: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 44 பள்ளிகளில் 3, 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கல்வி அடைவு ஆய்வு நேற்று நடத்தப்பட்டது. மாநில திட்ட இயக்ககத்தின் வாயிலாக பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டு மொழிப் பாடம் மற்றும் கணித பாடத் தில் மட்டும் ஆய்வு நடத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் 323 மாணவர்கள், 6ம் வகுப்பில் 325 மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் 317 மாணவர்கள் என 965 மாணவர்களுக்கு ஆய்வு நடத்தப்பட்டது.

44 களப்பணியாளர்கள் மூலம் நடைபெற்ற ஆய்வினை வட்டார கல்வி அலு வலர் செல்வம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன் ஆகி யோர் வட்டார ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு நடத்தி முடித்தனர். மாணவர்களிடையே மொழிப்பாடம் மற்றும் கணித பாடத்தில் கற்றல் வெளி ப்பாடுகளை கண்டறியும் நோக்கத்தில் இவ்வாய்வு நடந்தது.

The post கோட்டூரில் 44 பள்ளிகளில் மாநில கல்வி அடைவுத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kotur ,Mannarkudi ,THIRUVARUR DISTRICT ,KOTUR UNION ,Dinakaran ,
× RELATED பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி...