×

ஊழல் வேண்டாம் என்று சொல்வோம் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

தஞ்சாவூர், நவ.4: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு தஞ்சாவூரில் நடைபெற்றது. தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் 30.10.2023 முதல் 05.11.2023 வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகத்தில் பொது மேலாளர் சந்திரசேனா, தலைமையில் ஊழல் வேண்டாம் என்று சொல்வோம், தேசத்திற்கு அர்ப்பணிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, காவல் ஆய்வாளர் பத்மாவதி, துணை ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் தலைமை காவலர் அருள் ஆரோக்கியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

The post ஊழல் வேண்டாம் என்று சொல்வோம் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Thanjavur ,Bharat Sanchar Nigam Limited ,Thanjavur BSNL ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு