×

காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 4 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மடத்தூர் மெயின் ரோட்டிலுள்ள முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (24). இவரும், திரு.வி.க நகரை சேர்ந்த பால் வியாபாரி முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி மாரிச்செல்வம், கார்த்திகா ஆகியோர் கோவில்பட்டி சென்று பதிவு திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் நேற்று முன்தினம் முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

மாரிச்செல்வத்தின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், புதுமணத் தம்பதியினர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட சிலர் கொடுத்த தகவலின் பேரில் மாலையில் 3 பைக்கில் வந்த 6 பேர், மாரிச்செல்வம் வீட்டுக்குள் புகுந்து அவரையும், கார்த்திகாவையும் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் இசக்கிராஜா, ராஜபாண்டி, செழியன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

The post காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Marichelvam ,Vasantakumar ,Murugesan Nagar, Madathur Main Road ,VK Nagarai ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...