×

மெட்ரோ ரயில் பணி காரணமாக புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி காரணமாக புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஸ்டாரன்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்ேடரி சந்திப்பில் நிறுத்தப்பட்டு, குக்ஸ் சாலை, ஸ்டீபன்சன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, பேரக்ஸ் கேட் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

* ஸ்டாரன்ஸ் சாலையின் முழு பகுதியும் ஒரு வழிப்பாதையாக செயல்படும். (பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஸ்டாரன்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ஓட்டேரி சந்திப்பில் இருந்து ஸ்டாரன்ஸ் சாலையை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதியில்லை).

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Pulianthop ,Chennai ,Pulyanthoppu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...