புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டத்தில் காவிரியில் இருந்து மேலும் 23 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2600 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் தலைவர் எஸ்.கே.ஹல்தர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் கர்நாடகா அரசு தரப்பு அதிகாரிகள் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு தமிழ்நாடு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மேகதாது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில், ‘‘ நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் காவிரியில் இருந்து வினாடிக்கு 2600 கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் ’’ என உத்தரவிட்டார்.
The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நவ.23 வரை 2600 கனஅடி தண்ணீர்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.