×

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண காதல் தம்பதிகளின் உடல்கள் தகனம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண காதல் தம்பதிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இரு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டது. விவிடி சிக்னல் அருகே உள்ள மின் மயானத்தில் இருவரின் உடல்களும் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டன. 5 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பைக்கில் வந்த மர்ம கும்பல், வீட்டில் இருந்த மாரிச்செல்வம், கார்த்திகாவை வெட்டிக் கொன்று தப்பி ஓடினர்.

The post தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண காதல் தம்பதிகளின் உடல்கள் தகனம்..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...