சென்னை:தமிழகம் முழுவதும், ரேஷன் பொருட்களை பொதுமக்கள் நியாய விலை கடைகளில் வார நாட்களில் வாங்குவார்கள். இதற்கு வசதியாக முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். 3வது, 4வது வாரம் வெள்ளிக்கிழமை விடுமுறை ஆகும். தற்போது, வரும் 12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகை வர உள்ளதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவர். இதனால் வரும் 3ம் தேதி மற்றும் 11ம் தேதி வெள்ளிக் கிழமைகளில் ரேஷன் கடைகளை திறக்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் உணவுத் துறை சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு வரும் 3ம் தேதி மற்றும் 11ம் தேதி வெள்ளிக் கிழமை ஆகிய நாட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
The post தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் 3, 11ம் தேதி திறக்கப்படும்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

