×

கொடைக்கானலில் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிராத்தனை!


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து அவர்கள் விரும்பும் இனிப்புகள், பலகாரங்கள், படையல்கள் இட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அவர்களது கல்லறையில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவித்து, மலைகள் தூவி மரியாதை செய்து பிராத்தனை செய்தனர்.

இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மாவிற்காகவும், அமைதி பெறவும் அனைவரும் பிராத்தனை செய்தனர். இந்த கல்லறை திருநாளில் கொடைக்கானலில் உள்ள அனைத்து கிருஸ்துவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

The post கொடைக்கானலில் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிராத்தனை! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Grave Thirunal ,Christian ,Kodaikanal, Dindigul district ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...