டெல்லி: 4 மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கு தாம் செல்வதை தடுக்கவே அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். அமலாக்கத்துறை நோட்டீஸ் சட்டவிரோதம், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதல் காரணமாகவே தனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய நோட்டீஸை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரவிந்த் கெஜிரிவால் கூறியுள்ளார்.
The post 4 மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கு தாம் செல்வதை தடுக்கவே அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது: கெஜ்ரிவால் appeared first on Dinakaran.