×

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீரானது கொட்டி வருகிறது. இந்நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kurdala Falls ,Tenkasi ,Koortal ,Sri Lanka ,Kurthala ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...