×

தம்பதியை சரமாரி தாக்கி நடுரோட்டில் கத்தி வெட்டு 9 பேர் மீது வழக்கு வேட்டவலம் அருகே வழிவிடும்படி கூறிய

வேட்டவலம், நவ. 2: வழிவிடாமல் சென்றதை தட்டிக்கேட்ட தம்பதியை சரமாரி தாக்கி கத்தியால் வெட்டிய 9 பேர் மீது வேட்டவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(34), சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி அஸ்வந்தி. இருவரும் கடந்த 29ம் தேதி வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தமிழன், இளங்கோ, முனியப்பன், மகாதேவன், வெள்ளை, இளஞ்செழியன், சக்தி, கோபி, நெப்போலியான் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டபடி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அதே கிராமத்தை ேசர்ந்த பழனி என்பவர் ஹாரன் அடித்துள்ளார்.

ஆனால் அவர்கள், வழிவிடாமல் சென்றதால் பழனி மண் சாலையில் இறங்கி சென்றார். இதைபார்த்த ரமேஷ், அஸ்வந்தி ஆகியோர், ‘வாகனத்திற்கும், பொதுமக்களுக்கும் வழிவிடாமல் சென்றால் எப்படி’ என கேட்டுள்ளனர். இதில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழன் உள்பட 9பேரும் சேர்ந்து தம்பதியை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது அவ்வழியாக போலீசார் வருவதை பார்த்த 9பேரும் தப்பியோடிவிட்டனர். படுகாயம் அடைந்த ரமேஷ், அஸ்வந்தி இருவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரமேஷ் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தம்பதியை தாக்கிய தமிழன் உள்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தம்பதியை சரமாரி தாக்கி நடுரோட்டில் கத்தி வெட்டு 9 பேர் மீது வழக்கு வேட்டவலம் அருகே வழிவிடும்படி கூறிய appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Dinakaran ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...