×

பொதுமக்கள் வரவேற்பு பைக் மீது கார் மோதி அரிசி மில் மேனேஜர் பலி

வெள்ளகோவில்: வெள்ளகோவில் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் காங்கயம் அருகே பாப்பினி பகுதியில் உள்ள அரிசி மில்லில் மேனேஜராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். ஓலப்பாளையம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த காரும், பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மருத்தவர் செந்தில்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொதுமக்கள் வரவேற்பு பைக் மீது கார் மோதி அரிசி மில் மேனேஜர் பலி appeared first on Dinakaran.

Tags : mill ,Vellakoil ,Senthilkumar ,Ganapathipalayam ,Papini ,Gangayam ,Rice mill ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...