×

சிசிடிவி கேமரா செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்: ரயில்வே துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ரயில் நிலையங்களில் சிசிடிவி செயல்படுகிறதா என்னு கண்காணிக்க ரயில்வே துறைக்கு ஐகோர்ட் அறிவித்தி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழ்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கு நேற்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துகுமார், காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

ரயில்வே துறை சார்பில், ஏற்கனவே 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது. அவை முறையாக, திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

The post சிசிடிவி கேமரா செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்: ரயில்வே துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Railway Department ,Dinakaran ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...