சென்னை: தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: நவம்பர் 1, எல்லை போராட்ட தியாகிகள் நாள். திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ்நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெற முடிந்தது. அத்தகைய மேன்மைமிகு தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.