×

போனதோ போதை பொருள் சோதனை சிக்கியதோ ரூ.29 லட்சம்

விருதுநகர்: ஹவுரா – கன்னியாகுமரி விரைவு ரயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து. மதுரை அருகே வந்த ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயிலில் பயணம் செய்த சம்பாஜி (55) என்பவர் கொண்டு வந்த பையில் ரூ.29 லட்சம் பணம் இருந்தது. விசாரணையில் நாகர்கோவிலை சேர்ந்த நகைக்கடைக்காரர் கோலப்பன் என்பவர் மதுரையில் நிவாஸ் என்பவரிடம் உருக்கிய தங்கத்தை கொடுத்ததாகவும், அதற்குரிய பணத்தை சம்பாஜியை பெற்று வரச் சொன்னதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post போனதோ போதை பொருள் சோதனை சிக்கியதோ ரூ.29 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Howrah ,Kanyakumari Express ,Madurai ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...