மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஏர் ஹாரன் வைத்திருந்த பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்பாடு தொடர்பாக பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஏர் ஹாரன்களுடன் இருந்த 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
The post மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஏர் ஹாரன் வைத்திருந்த பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம்..!! appeared first on Dinakaran.