×

இன்று புதுச்சேரியின் விடுதலை நாள்: புதுச்சேரி கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் ரங்கசாமி மரியாதை..!!

புதுச்சேரி: பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுதலைபெற்ற தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார். காவல்துறையினர், படைப்பிரிவினர், பள்ளி மாணவ – மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954ம் ஆண்டு நவ. 1ம் தேதி விடுதலை கிடைக்கப்பெற்றது. 180 ஆண்டுகளுக்கு பின் வாக்கெடுப்பு மூலம் புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.

The post இன்று புதுச்சேரியின் விடுதலை நாள்: புதுச்சேரி கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் ரங்கசாமி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry's Liberation Day ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Puducherry beach ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி