×

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு 117 பேருக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

 

ராமநாதபுரம், நவ. 1: தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று ரு 9 லட்சம் மதிப்பில் 117 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116 வது ஜெயந்தி, 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு ரூ.9 லட்சத்து 17ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பசும்பொன் கலையரங்கில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கரு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் 117 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிறைவாக பரமக்குடி சப்கலெக்டர் அப்தாப் ரசூல் நன்றி கூறினார். கமுதி சேர்மன் தமிழ்செல்வி போஸ், பி.டி.ஓ மணிமேகலை, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, ஒன்றிய கவுன்சிலர் வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு 117 பேருக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Devar Jayanti and Kurupuja festival ,minister ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...