×

எய்ம்ஸை கட்ட கோரி செங்கல் அனுப்பும் போராட்டம்

திண்டுக்கல்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்காத ஒன்றிய அரசை கண்டித்து, திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கைகளில் செங்கல்லை ஏந்தியவாறு, பேரணியாக பேருந்து நிலையம் வழியாக காமராஜர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post எய்ம்ஸை கட்ட கோரி செங்கல் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Dindigul ,Madurai ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...