×

லஞ்சம் வாங்கிய விஏவுக்கு சிறை

செங்கல்பட்டு: அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (68). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். பினாயூர் கிராமத்தில் கூடுதல் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் பிரபு இவர்க்கு 7.5 ஏக்கர் நிலம் பினாயூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரபு சொத்து சான்றிதழ் பெற பினாயூர் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொருப்பு ராஜசேகரை அனுகிய போது சொத்து சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இறுதியாக ரூ.20 ஆயிரம் பிரபுவிடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் வாங்கும்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2008ம் ஆண்டு சாத்தனசேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயஸ்ரீ குற்றவாளியான ராஜசேகர்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

The post லஞ்சம் வாங்கிய விஏவுக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : VA ,Chengalpattu ,Rajasekhar ,Anakaputtur ,Chathanancheri village ,Salavakkam ,Kanchipuram district ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...