×

பைக் மீது கார் மோதி ஓட்டுநர் பலி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இந்தளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி (38). இவர் சென்னையில் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் தனது கிராமத்தில் இருந்து, பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலை அருகே செல்லும்போது, பின்னால் அதிவேகமாக வந்த ஒரு கார் ஒன்று இவர் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த விஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காரரை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Viji ,Indolur ,Achirupakkam ,Chengalpattu district ,Chennai ,
× RELATED நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது