×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: முட்டையில் ஜீரோ என எழுதி கோஷம் எழுப்பினர்

திருவள்ளூர்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது முட்டையில் ஜீரோ என எழுதி கண்டன கோஷம் எழுப்பினர். நீட் விலக்கு நம் இலக்கு என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், சுகுமார், பாபு, புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஓ.ஏ.நாகலிங்கம், கே.திராவிட பக்தன், வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன் சக்ரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, வழக்கறிஞர் ஆதாம், கிஷோர், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கிறிஸ்டி, ரமேஷ், மகாலிங்கம், அரிகிருஷ்ணன், சீனிவாசன், வினோத்குமார், ரவீந்திரா, ஆர்த்தி ரவி, பழனி, சண்முகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு பயில நீட் தேர்வில் கலந்து கொண்டு ஜீரோ மதிப்பெண் பெற்றிருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையில் ஜீரோ என எழுதி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: முட்டையில் ஜீரோ என எழுதி கோஷம் எழுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,DMK ,NEET ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...