×

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவரை கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு எழுதியுள்ள கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ் கனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தை சார்ந்த என்.ஜே.போஸ், பி.சேசுராஜா, ஆர்.சகாயம் ஆகிய குழுவினர் டெல்லியில் நேரில் சந்தித்து நேற்று அளித்தனர். கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 37 மீனவர்கள் மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில், 28.10.2023 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதை ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் நன்கு அறிவார். 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 10 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தடையின்றி தொடர்வது வேதனை அளிக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் எவ்வித காலதாமமுமின்றி, உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளிதரன், முதல்வரின் கடிதம் ஏற்கனவே தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்தார். மேலும், இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவரை கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Union External Affairs ,Minister ,Chennai ,Union Minister of State for External Affairs ,V.Muralitharan ,Member of Parliament ,D.R. Balu ,.Stalin ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்