×

சோக்காடி கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டனர். பட்டியலினத்தை சேர்ந்த 6 பேரும், மாற்று சமூகத்தை சேர்ந்த 7 பேரும் என 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.எஸ்.சி, எஸ்.டி பிரிவு உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணியின் போது தூசு பறந்ததாக ஏற்பட்ட தகராறு சம்பவம் ஜாதி கலவரமாக மாறியது.

The post சோக்காடி கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK union ,Chokkadi riots ,Krishnagiri ,AIADMK ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே ஆவணங்களின்றி...