×

அறந்தாங்கி அருகே பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே குளமங்கலம் பாரத பறவைகள் அறக்கட்டளை சார்பில் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அறந்தாங்கி, எரிச்சி, ஆவணத்தாங்கோட்டை, குளமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் தாய், தந்தையை இழந்த மற்றும் மிகவும் வறுமை நிலையில் உள்ள 25 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு விரும்பும் புத்தாடைகள், பட்டாசு வகைகள் மற்றும் அழகு சாதனங்கள் மற்றும் அணிகலன்கள், செப்பல் போன்றவைகள் வழங்கினர். மேலும், அந்த குழந்தைகள் மகிழ்விக்கும் விதமாக மனோரா, முத்துப்பட்டினம், புதுப்பட்டினம் ஆகிய சுற்றுலா தளத்திற்க்கு அழைத்து சென்று குதிரை சவாரி, ரயில் பயணம், ராட்டினம் மற்றும் கடலில் குளிக்க வைத்தும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

The post அறந்தாங்கி அருகே பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Aranthangi ,Arantangi ,Kulamangalam Bharat Bird Trust ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்