×

முன்விரோத தகராறில் மொபட்டில் சென்ற சிறுவனுக்கு வெட்டு: உடன் சென்ற குழந்தை காயம்

ஆவடி: வில்லிவாக்கம் வள்ளியம்மை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மகன் அப்பு (எ) சந்துரு (16). 10ம் வகுப்பு வரை படித்துள்ளான். இவனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சந்துரு தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து திருவேற்காடு ஐயப்பன் நகர் முதல் தெருவில் வசிக்கும் அவனது அக்கா நிவேதா வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கினான். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சந்துரு தனது அக்காவின் 3 வயது குழந்தையை மொபட்டில் அழைத்துக்கொண்டு அயப்பாக்கம் லோட்டஸ் காலனியில் வசிக்கும் சித்தப்பா முத்துக்குமார் வீட்டுக்கு சென்றான்.திருவேற்காடு – அயப்பாக்கம் சாலையில் மொபட்டில் வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துருவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சந்துருவுக்கு தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினான். மேலும், அவனது அக்கா குழந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த சந்துருவின் சித்தப்பா முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார்.புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சிறுவன் சந்துரு, குழந்தையை வெட்டி கொல்ல முயன்றது வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வெள்ளை, ஹரிஹரன் ஆகியோர் என தெரியவந்தது. மேலும், போலீசார் தனிப்படை அமைத்து இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்….

The post முன்விரோத தகராறில் மொபட்டில் சென்ற சிறுவனுக்கு வெட்டு: உடன் சென்ற குழந்தை காயம் appeared first on Dinakaran.

Tags : Awadi ,Santoshkumar ,Villivakakam Vallliyam Nagar ,sanduru ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்