×

மார்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் தின்று சாவு

மார்த்தாண்டம், அக்.31 : மார்த்தாண்டம் அருகே நட்டாலம் காட்டாவிளையை சேர்ந்தவர் பால்துரை (39). தொழிலாளி. பால்துரைக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஜா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் திடீரென கடந்த 27ம் தேதி விஷம் தின்று பால்துரை மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜா அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் தின்று சாவு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Baldurai ,Natalam Katavilai ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...