×

கண்ணூர் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நேற்று கண்ணூர் அருகே உள்ள கேளகம் ராமச்சி வனப்பகுதியில் 3 வனக் காவலர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிகளுடன் 5 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த வனக்காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மாவோயிஸ்டுகள் வானத்தை நோக்கி 6 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். பீதியடைந்த வனக் காவலர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அறிந்ததும் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post கண்ணூர் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Maoists ,Kannur ,Thiruvananthapuram ,Wayanad ,Palakkad ,Kerala ,
× RELATED வயநாடு தொகுதி மக்களை...