×

உணவு தேடி வந்த யானை துப்பாக்கியால் சுட்டு கொலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம், ஜவளகிரி வடக்கு பீட்டில், நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சென்னமாளம் காட்டுப்பகுதியில், 15 முதல் 16 வயதான ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் குழுவினர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. உணவு தேடி வந்த யானையை, யாரேனும் சுட்டுக் கொலை செய்தார்களா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உணவு தேடி வந்த யானை துப்பாக்கியால் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri District ,Hosur Vanakottam ,Kaveri North Wildlife Sanctuary ,Javalagiri North Beetle ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...