×

அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு உத்தரவு 

சென்னை: அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலை கழகத்தில் சான்றிதழ் அச்சடித்தது, டிஜிட்டல்மயமாக்கப்பட்டது உள்ளிட்டவற்றில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சூரப்பா ஆஜராக் சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைகழகத்தில் படிக்க கூடிய மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை பட்டியல் சான்றிதழ்கள், மதிப்பீட்டு தரம் உள்ளிட்டவற்றை தொகுப்பு விவர அறிக்கையாக டிஜிட்டல் மையமாக்க வேண்டும் என்ற பரிந்துரை துணை வேந்தரிடம் முன்மொழியபட்டது.
இதற்காக 2 நிறுவனங்களுடன் ரூ.11.41 கோடி மதிப்பில் அப்போதைய தேர்வு கட்டுபாட்டாளார் புரிந்துனர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தார். இதில் குறிபாக துணை வேந்தருக்கு சமர்பிக்க்பட்ட முன்வடிவில் குறிப்பிடபட்ட செலவை விட கூடுதலாக நிதி செலவிடபட்டதாக CAG அறிக்கையில் குறிப்பிடபட்டிருந்தது. மேலும் இந்த ஏல மோசடி செய்யபட்டதற்கான ஆதாரங்களையும் தணிக்கை குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்வதற்காக நிறுவபட்ட தனியார் நிறுவனத்தில் 7,33,722 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கபட்டது. ஆனால் 20,00,000 பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கபட்டதாக அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கபட்டது. அதே போல மற்றொறு நிறுவனத்திற்கு 1,20,000 பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு பணம் வழங்கபட்டது. ஆனால் முறையாக இந்த 2 நிறுவனங்களும் பணிகளை மேற்கொள்ளவில்லை என CAG அறிக்கையில் தெளிவாக குறிப்பிடபட்டது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு ஏற்கனவே அண்ணா பல்கலை கழகத்தில் ஒரு விரிவான விசாரனை நடத்தியது. அதன்படி ஒரு துணை குழு அமைக்கபட்டது. சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் செல்வபெருந்தகை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி தலைமையிலான குழு  இன்றைய தினம் அண்ணா பல்கலைகழகத்தில் விசாரணை நடத்தபட்டது. அதில் முன்னாள் துணை வேந்தர், தேர்வுகட்டுபாட்டு அதிகாரிகள் உட்பட 6 ஐஏஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தபட்டது.
மேலும் இதுபோன்று 3 முதல் 4 கட்டங்களாக விசாரணை நடத்தபடும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவும் ஆஜராகும் படி அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த முறைகேடு புகாரில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கைக் குழு உத்தரவு  appeared first on Dinakaran.

Tags : Former ,Deputy Minister ,Surappa Aajar ,Audit Committee of the Legislature ,Anna University ,Adimuga ,Chennai ,Surappa ,Adimuka ,Law Enforcement Accounts Audit Committee ,Surappa Azhar ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...