×

வாரத்தின் முதல் நாள்!: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 64,113 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 64,113 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2.4%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 2%, ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 1.3% விலை உயர்ந்தன. பார்த்தி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கிப் பங்குகள் தலா 1% விலை அதிகரித்தன.

கோட்டக் வங்கி, டி.சி.எஸ்., எல்டிே, எஸ்.பி.ஐ. நெஸ்லே இந்தியா பங்குகளும் விலை அதிகரித்து விற்பனையாயின. டாடா மோட்டார்ஸ் பங்கு 1.9%, மாருதி சுசூகி பங்கு 1.5%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 1.3% விலை குறைந்து கைமாறின. ஐ.டி.சி., என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்செர்வ், எச்.சி.எல். டென், இன்போசில் பங்குகளும் விலை குறைந்தன. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 10,141 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post வாரத்தின் முதல் நாள்!: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 64,113 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!