×

தெலங்கானா பிஆர்எஸ் எம்பி பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து; சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது திடீர் தாக்குதல்..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற பிஆர்எஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் ரெட்டி, கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகர் ரெட்டி, தற்போது சட்டப்பேரவை தேர்தலில் திபெத் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரபாகர் ரெட்டி, இன்று சித்திபேட் மாவட்டத்தின் சூரம்பள்ளி பகுதியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது கூட்டத்தில் இருந்து வந்து பிரபாகர் ரெட்டிக்கு கை குடுக்க முயன்ற ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகர் ரெட்டியை குத்தினார். உடனடியாக அந்த நபரை பிடித்த பிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கத்திக்குத்தால் காயமடைந்த பிரபாகர் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர், தாக்குதலுக்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தெலங்கானா பிஆர்எஸ் எம்பி பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து; சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது திடீர் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,PRS ,Prabhakar Reddy ,PRS Party ,
× RELATED தெலுங்கானா முன்னாள் முதல்வரும்...