×

மது குடித்து ஜாலியாக இருப்பதற்கு ஆட்டோ திருடிய இருவர் கைது: 3வது கண் காட்டி கொடுத்தது

அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(32). ஆட்டோ ஓட்டிவரும் இவர், கடந்த 28ம் தேதி தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதுசம்பந்தமாக பிரபு கொடுத்த புகாரின் படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் ஆட்டோ மாயமான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 2 பேர் ஆட்டோவில் வந்து பிரபுவின் ஆட்டோவை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில், ஆட்டோவின் நம்பரைவைத்து முகப்பேர் மாதா கோயில் தெரு என்பது தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு போலீசார் முகப்பேர் பகுதிக்கு சென்று அங்கிருந்து தப்பமுயன்ற பிரபாகரன்(43), பிரபு(45) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள்தான் பிரபுவின் ஆட்டோவை திருடியுள்ளனர் என்று தெரிந்தது. இரண்டு பேரும் குடிபோதைக்கு அடிமையானதால் மது குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் ஆட்டோவை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் ஜாலியாக இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்து பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மது குடித்து ஜாலியாக இருப்பதற்கு ஆட்டோ திருடிய இருவர் கைது: 3வது கண் காட்டி கொடுத்தது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Prabhu ,Nelkukunram ,Chennai ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி