×

கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசில் ஒருவர் சரண்

கோவை: கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூர் காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தர். சரணடைந்தவர் பெயர் டோமினிக் மார்டின் எனவும், குண்டு வெடிப்பு நடந்த ஜெஹோவா விட்னெசெஸ் சபையின் உறுப்பினராக இருந்தவர் எனவும் மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை மாநாடு நடந்த அரங்கத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஒருவர் பலியானார். 35 பேர் படுகாயமடைந்தனர். 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் யாகோவாயா கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை சுமார் 9 மணிக்கு ஜெபக்கூட்டம் தொடங்கியது. இதில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது காலை 9.30 மணியளவில் திடீரென அரங்கத்தில் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

மொத்தம் 3 முறை குண்டு வெடித்தது. இதில் அரங்கத்தில் இருந்த நாற்காலிகளில் தீ பிடித்தது. உடனடியாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் கருகி உயிரிழந்தார். 23 பேர் காயமடைந்தனர். இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கொச்சி களமசேரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஜெஹோவா விட்னெசெஸ் சபையின் உறுப்பினராக இருந்த டோமினிக் மார்டின் என்பவர் சரணடந்துள்ளார்.

The post கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசில் ஒருவர் சரண் appeared first on Dinakaran.

Tags : Kerala ,KOWAI ,THIRUCHUR POLICE STATION ,KALAMASERI, KERALA ,Police Officer ,Saran ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!!