×

முத்தையாபுரம் அருகே கோயிலில் பூட்டை உடைத்து பணம் திருடியோருக்கு வலை

ஸ்பிக்நகர், அக்.29: தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே செல்வ விநாயகர் கோயிலில் பூட்டை உடைத்து பணம் திருடியோரை போலீசார் தேடி வருகின்றனர். த்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் ஓய்வுபெற்ற ஏட்டு ராஜூ (75) என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு கோயிலை பூட்டிவிட்டு சென்ற இவர் மறுநாள் காலை திரும்பிவந்த போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு பதறினார். மேலும் அதில் உள்ள உண்டியலில் இருந்த ரூ.500 திருடுப் போனது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ன்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார், பணத்தை திருடிச்சென்றோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

The post முத்தையாபுரம் அருகே கோயிலில் பூட்டை உடைத்து பணம் திருடியோருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Muthiyapuram ,Spignagar ,Selva Vinayagar temple ,Thoothukudi ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...