×

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பற்றி பயணிகள் தெரிந்துகொள்ள சமூக ஊடக தளங்கள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பற்றி பயணிகள் தெரிந்துகொள்ள சமூக ஊடக தளங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். சமூக ஊடகங்கள் மூலம் பயணிகளுக்கு போக்குவரத்து கழகங்களில் ஏற்கனவே உள்ள திட்டங்கள், புதிய திட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை அவ்வப்போது ஊக்குவிக்க முடியும். பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறிப்புரைகளுக்கு தகுந்த பதில் மற்றும் நடவடிக்கை எடுப்பது போக்குவரத்து கழகங்களை சீர்படுத்தவும், படம், வீடியோவை பதிவிடுதல் மற்றும் பலவற்றின் மூலம் அவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள சமூக ஊடகங்கள் நம க்கு உதவுகின்றன.

பொதுமக்களின் கேள்விகள் மற்றும் கருத்துகளை சேகரிப்பதன் மூலம், அதனை பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப செயல்பட முடியும். இது போக்குவரத்துக் கழகங்கள் மீது பயணிகளிடம் நம்பிக்கையை மேலும் வளர்க்கும் மற்றும் நேர்மறையான பார்வையை உருவாக்கும். இந்த சமூக ஊடக பக்கங்களை பின்தொடர்வதன் மூலம், நமது போக்குவரத்து துறை மற்றும் 8 போக்குவரத்து கழகங்களை பற்றியும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மேலும் அறிந்து கொள்ள்லாம், இது அவர்களின் குறிப்பு, சந்தேகங்களுக்கு பதில் தெரிவிப்பதன் மூலமோ அல்லது படம், வீடியோவில் குறியிடுவதன் மூலமோ அவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது.

பொதுமக்களின் நலனுக்காக சமூக ஊடக தளங்கள் “Twitter, Facebook, Youtube” ஆகியவற்றை முதற்கட்டமாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த ஊடகத்தளத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகள் அறிந்து தங்களது குறிப்புகளை தெரிவித்து போக்குவரத்து கழகங்களின் சேவையை மேலும் மேம்படுத்தி பயன்பெறலாம்.

The post தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பற்றி பயணிகள் தெரிந்துகொள்ள சமூக ஊடக தளங்கள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Transport Corporations ,Minister ,Sivasankar ,Chennai ,S.S.Sivasankar ,Tamil Nadu Government Transport Corporations.… ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...