×

51,000 பேருக்கு பணி நியமன ஆணை பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய அரசு சார்பில் ‘ரோஜ்கார் மேளா’ நேற்று நடந்தது. இதில், சுமார் 51,000 இளைஞர்களுக்கு பல்வேறு ஒன்றிய அரசு துறைகளில் பணியாற்ற பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: மரபுசார் துறைகள் மற்றும் வளர்ந்து வரும் துறைகளான புதுப்பிக்கத்தக்க எரிபொருள், பாதுகாப்பு, தானியங்கி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இன்றைய இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு தொழில்துறைகளில் பணி வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

The post 51,000 பேருக்கு பணி நியமன ஆணை பிரதமர் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Rojkar Mela ,Union Government ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?