×

புனிதநீர் தெளித்த ட்ரோன் விழுந்து சிறுவர்கள் படுகாயம்

சேலம்: சேலம் உடையாப்பட்டியில் உள்ள வேடியப்பன், அம்சாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், பெரிய அளவிலான ட்ரோன் மூலம் பூக்களும், புனித நீரும் தெளிக்கப்பட்டது. கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், திரண்டிருந்த பக்தர்கள் மீது பெரிய ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது, ஒயரில் ட்ரோன் உரசி, திடீரென கீழே விழுந்தது. கூட்டத்திற்குள் நின்றிருந்த கண்ணன் (7), ஆதித்யா (15) ஆகிய இருவரும் ட்ரோன் விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புனிதநீர் தெளித்த ட்ரோன் விழுந்து சிறுவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kumbabhishek ,Vediyappan ,Amsaramman ,Odiyapatti ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்