தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 31ம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31.10.2023 (செவ்வாய்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர், வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.
The post மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.
