×

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர்: புரசைவாக்கம் திடீர் நகரை சேர்ந்தவர் நாகவல்லி (36). அதே பகுதியை சேர்ந்தவர் நந்தினி (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த 5 பேர் நாகவல்லி மற்றும் நந்தினி ஆகியோரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றனர். புகாரின் பேரில், தலைமை செயலக காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜனத் (எ) ஜப்பான் (25), சதீஷ்குமார் (எ) கஜா (20), புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (20), விக்னேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பணம் பறித்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Nagavalli ,Purasaivakam ,Nandini ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு