×

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு வாழைத்தார் ஏலம்


ஆனைமலை: கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம், நேற்று நடந்தது. ஏலத்தின் போது, 7 விவசாயிகள் மொத்தம் 190 வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர். வாழைத்தார் ரகங்கள் அனைத்தும், தனித்தனி ரகமாக ஏலம் நடைபெற்றது. இதில், செவ்வாழைத்தார் ஒரு கிலோ ரூ.55 வரையிலும், கற்பூர வள்ளி ரூ18 வரையிலும், நேந்திரன் ரூ.23க்கும், பூவன் ரூ.16க்கும் ஏலம் போனது.

இதில், விவசாயிகள் கொண்டுவந்த மொத்தமுள்ள 190 வாழைத்தார்களும் ரூ.50ஆயிரத்து 277க்கு ஏலம் போனது. இதனை வியாபாரிகள் 6 பேர் கொள்முதல் செய்தனர். கடந்த வாரத்தைவிட இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்வேல் தெரிவித்தார்

The post ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு வாழைத்தார் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Animal Mall ,Anaimalai ,Koi Pollachi ,Anaimalai Sale Hall ,Dinakaran ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...