×

கோவை சிறையில் உள்ள தனது கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி மனைவி மனு..!!

சென்னை: கோவை சிறையில் உள்ள தனது கணவர் காளிமுத்துவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி மனைவி திவ்யா மனு அளித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்ற காளிமுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை சிறையில் உள்ள தனது கணவரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு, சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

The post கோவை சிறையில் உள்ள தனது கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி மனைவி மனு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Divya ,Kalimuthu ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...